Translate

Friday, March 13, 2015

அது ஒரு கனாக்காலம்




இரவோடு இரவாய்
பகலொடு உறவாய்
இடைவெளி ஏதுமின்றி 
நகர்ந்த நாட்களது

நட்போடு மகிழ்வாய்
கனிந்திருந்த காலம்
துள்ளலோடு கடந்து
நிகழ்ந்ததந்த நிகழ்வு.

இல்லாத புது கனவு
இதயத்தை கவ்விக் கொள்ள,
இருக்கும் நிலை மறந்து 
இனிப்பையது நாடியது.
இருப்புக் கொள்ளாமல்
இயங்கியதே ஒரு முகமாய்.

No comments: