இரவோடு இரவாய்
பகலொடு உறவாய்
இடைவெளி ஏதுமின்றி
நகர்ந்த நாட்களது
நட்போடு மகிழ்வாய்
கனிந்திருந்த காலம்
துள்ளலோடு கடந்து
நிகழ்ந்ததந்த நிகழ்வு.
இல்லாத புது கனவு
இதயத்தை கவ்விக் கொள்ள,
இருக்கும் நிலை மறந்து
இனிப்பையது நாடியது.
இருப்புக் கொள்ளாமல்
இயங்கியதே ஒரு முகமாய்.
No comments:
Post a Comment