Translate

Monday, March 30, 2015

இடையிலே ஏன்

என் நினைவிலே நீயும்
நிலையாய் இருக்க,

படுத்துறங்கும் நேரம்
கதையொன்றைச் சொன்னாய்.

கேட்கும் தோரணையில்
"உம்"மதைக் கொட்டினேன்.

துளிகளாய் நேரம்
கடந்தே செல்ல,

விழிகளை உறக்கம்
கவ்விக் கொள்ள,

"உம்"மென்ற ஒலியும்
தேய்ந்து போக,

மின்வெட்டாய் அதுவும்
துண்டித்து போக,

விடிந்ததும் கேட்டேன்
இடையிலே ஏன், விட்டாயென...

No comments: