Translate

Saturday, March 7, 2015

கண் விழிப்பேன்



காமனாய் உருவெடுத்து 
கண்களை கவர்ந்து விட்டாய்.
கரும்புதனில் நாண்பூட்டி 
கணைதனை தொடுத்து விட்டாய் - உன்  
கரமது எனை  தழுவ 
காதலால் சரணடைந்தேன்.
கட்டுடலால் நீ அணைக்க 
கனிந்துருகி நான் படர 
காண்போர் கண்டுனமை வியந்திருக்க 
காவியமாய் நம் வாழ்வு பதிந்திருக்க
காலமெல்லாம் சுருதியுடனே 
கானம் பாடி சுவை சேர்ப்பேன்.
காளை, உன் கனவுகளோ 
காட்சிகளாய் நீ மாற்ற 
கண் விழிப்பேன் எந்நாளும்  


கருத்தாக உன்னுடனே இணைந்திருந்து.  

No comments: