பொங்குகின்ற பூம்புனலாய்
புத்துணர்வு ஆட்டுவிக்க
ஆடுகின்ற எம் மனத்தில்
நினதாட்டம் ஆட்சி செய்ய.
நிலையற்ற நிலையினிலும்
இணைந்தேனே குதித்தாடும் நின்னுடனே.
நினைத்தேனே உன்னுறவு எம்முடனே
என்றுமே நிலைத்திருக்க.
குக்கூ... குக்கூ...வென குயிலோசை
செவிப்பறை தழுவுகின்ற பொழுதெல்லாம்
எம் குருதியிலே ஊடுருவும்
உயிராய் உன் குரலோசை.
No comments:
Post a Comment