எட்டெட்டாய் நடைப் பயன்று
ஏற்றமது அதுவடைந்து
A.M.பத்ரி நாராயணன்
பத்தெட்டோ தொடும் தூரத்திலே..
பழகும் வித்தை அறிந்தவரே
பாடம் சொல்லித் தந்தவரே.
பயணிக்கும் பாதைகளோ
பக்குவமான நிலையினிலே.
இனிமையாய் தொடர்ந்தது
இனியும் உமக்கமைய,
பண்டரிபுறத்தான் அருளளித்து
பக்கமாய் உமக்கிருந்து
பலமதை தருவாரே.
அவனடி தொழுதே
நாங்களும் பிரார்த்தித்தோம்
வாழ்நாள் முழுவதுமே
நீங்களிருவரும் நலமாய் வாழ்ந்திடவே.
இனிய ஆயுஷ் ஹோம வாழ்த்துகளுடன் நமஸ்காரங்களும்
தேவரீர் பாவாவுக்கும், லஷ்மிகரம் பொருந்திய அக்காவுக்கும்
A.M.பத்ரி நாராயணன்
ராஜராஜேஸ்வரி
மற்றும் குடும்பத்தினர் அனைவரும்
No comments:
Post a Comment