விரிகிறது இதழ்
பூக்கும் போதெல்லாம்
''புன்னகை''
நாணின்றி
வளையும் வில்
''புருவம்''
கணையின்றி
கணை வீசும்
காற்றிலது
''விழி''
அவசரப்பட்டது மனம்,
அல்லல் பட்டது விழி
''திறக்க''
எப்படித்தான் சொல்கிறதோ
ஆயிரம் கதைகள்
''விழிகள்''
கதை சொல்ல
எங்கு கற்றாய்
''விழியில்''
எப்படி கற்றுக் கொண்டாய்
தவறின்றி தாக்க
''விழிகளில்''
கண்களுக்கும்
உனைக் கண்டதும்
''தாகம்''
இராமர் வில்லும்
தோற்று விடுகிறது
உன்னிடத்தில்
''கணை தொடுப்பதில்''
புவியில்
இரண்டு
விண்மீன்கள்
.
இனிய நாள் வாழ்த்துக்கள் நண்பர்களே !
No comments:
Post a Comment