Translate

Sunday, October 26, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்






திருமணமான 33 வருடங்களில் எம் மனைவியார் திருமதி.ராஜராஜேஸ்வரி அம்மையார் அவர்களுக்கு,   முதன்முதலாய்  கூறும் பிறந்தநாள் வாழ்த்திது.

சொற்களுக்கு உருவமாய் நீரிருக்க,
வாழ்த்திட சொற்களுக்கு எங்கு போவேன்?
சிந்திய சொற்கள் சில சேர்த்து வைத்தேன்.
அதை இணைத்தேன், இன்றுமை வாழ்த்தி விட.
உருண்டோடும் நினைவுகளோ வாழ்வின் ஓட்டத்திலே,
புதுமையாய் இருக்குமிது முதலாய் இன்றுமை ஆராதிப்பதால்.
நலமுடன் நீர் இருந்து, மகிழ்வுடன் என்றுமே வாழ,
இறைவனை பிரார்த்திக்கிறேன், எம் இணையாய் ஆனதிலிருந்து.
மீதமிருந்த சொற்களை வாரிரைத்தேன் 
நினைவுகள்  பூமழையாய் நனைத்திடவே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் எம்மினிய சீமாட்டியே.


No comments: