கிளம்புகின்ற வெடியோசை அண்டத்தையே அதிர வைக்க,
பார்க்காத கோலமெல்லாம் பரப்பரப்பாய் சுற்றிக்காட்டி,
வண்ணத்துளிகளாய் பொங்கி நீயும் பூமழையாய் இறங்கும் போது,
கண்களெல்லாம் பரவசத்தால் பூரிக்குமே விழி விரித்து.
ஆகாச நிலவை நோக்கி ஆகாசவாணம் விட்டு
அது வாரியிறைத்து சீறி விழும் அழகு காண்போம்.ஆனந்தமாய்.
மழையில்லா புகைமேகம் வானத்தை மூடிக் கொள்ள,
உற்சாகமோ புரண்டோடும் விழாக்கோல மகிழ்வுகளில்
நட்புகளுக்கும், உறவுகளுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
#எல்லையில்லா மகிழ்வோடு கொண்டாடுங்கள்.
#எச்சரிக்கையாய் கொண்டாடுங்கள்.
No comments:
Post a Comment