பாவலர். இராஜ. தியாகராஜன்
வண்டமிழ் பாவலரோ
பரவசமாய் பார்த்திருக்க,
புன்னகையோ அகத்தினிலும்
மலராய் பூத்திருக்க,
படம் பிடித்ததையா
பளிரென ஒளிவீசி.
இனிய நாள் வணக்கம் பாவலரே..
https://www.facebook.com/photo.php?fbid=993755720640370&set=a.158691114146839.38380.100000178538631&type=1&theater
பாவலர். இராஜ. தியாகராஜன்
அவர்களின் விளக்கம்
கவிஞர்Dhavappudhalvan Badrinarayanan A M மிக்க நன்றி உங்கள் இனிய
கவியுரைக்கு.
மிளிர்ந்திடும் கணித்திரை விழியத்தைக் காண்கையிலே,
பளிச்சென்றே செல்வனவன் படுசோராய் சொடுக்குகையில்
வெளிப்பட்ட மகிழ்வென்னும் விந்தையென, கரைகாணாக்
களிபொங்கும் நிகழ்வெனவே கணப்போது படமிதுவே:
எமது பதில் நன்றி:
ஆஹா...
சொக்க வைக்கிறது உமது நடை.
சொல்லறியா எமக்கது முடை.
பண்டமிழோ பாவலருக்கு உடை
நடைபோடுமே என்றுமது படை.
மிக்க மகிழ்ச்சி பாவலரே.
தமிழன்னை பால் புகட்டியமைக்கு.
No comments:
Post a Comment