ஒலிகளே நமக்குள் மொழியாக,
உன் புன்னகையே
ஏற்புரையாய் வெளிக்காட்டும்.
கண்களின் ஒலித்தாவல்
இதழ்களில் பூவாக,
விரியுமே புன்னகை
அழகாக.
விந்தைக் காட்டுதே
பூபாளமாய் இசைக்கூட்டி.
செய்தி ஒன்றையே அது கூறும்
அரவணைப்பை மட்டுமே அது நாடும்.
கன்னத்தில் குழி விழ
கண்களில் ஒளி மிளிர
கக்கக்க… சிறு ஒலி
எனை ஈர்க்க,
கடத்துமே புன்னகையை
புன்சிரிப்பாய்.
என் விழித்தாண்டி,
குளிர்விக்குமே இதயத்தை
சிறு தூறலாய்
பனித்துளிகள் வீழ்ந்தது போல்.
மொழியறியா இந்நேரப் புன்னகை
தொடர வேண்டும்
என்றென்றும் நமக்குள்ளே.
மொழியறிந்து
எனக்கிணையாய் ஆனாலும்
ஆக்கம்:- ✍️
தவப்புதலவன்
2 comments:
தமிழ்மாறன் தமிழ்மாறன்:- சிறப்பான வர்ணனைகள்.
சிந்தனை ஊற்றாய் கவி
வரிகள்.. வாழ்த்துக்கள் கவிஞரே..!
தூரல் = தூறல்..
மாத்திடுங்க..
நடுவர், கவிஞர் திரு. தமிழ்மாறன் தமிழ்மாறன் அவர்களுக்கு, இனிய மதிய வணக்கம் 🙏. வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி. 😊 தவறைத் திருத்தி விட்டேன் ஐயா.
Post a Comment