கன்னியென்றாலே
கண்டத்து
சனியானதே
வரதட்சனை
பெயராலே
வாராக்கடன்
கொடுக்க வேண்டும்.
களையாய்
இருக்க வேண்டும்
கழுத்திலே
நிறைத்தனுப்ப வேண்டும்.
கைப்பிடித்து
அழைத்து செல்ல, -மோட்டார்
கைவண்டி
பெரிதொன்று வேண்டும்.
அடகு
வைக்க தலை வேண்டும்.
மீட்டெடுக்க
திறமை வேண்டும்.
ஒன்றிக்க
ஒன்றில்லை
என்றது
நிலைனால்
கன்னியவள்
கழியாமல்
முற்றியவள்
கிடப்பாளே
கைப்பிடிக்க
ஒருவனை
எதிர்நோக்கி..
அறிவீரோ?
தனக்கில்லையீடென
தள்ளி
வைக்கும் கன்னியருமுண்டு
முதிர்கன்னிகளாய்
இங்கு பலர்
ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment