கடகடவென்ற
இடியோடு, படப்படவென மின்னலடிக்க,/
சரசரவென
பெருமழை நாள் முழுக்க பொழிந்தோட,/
குப்பைகளையும்
இழுத்துக் கொண்டு, சலசலவென சாலையில்,/
சாக்கடை
நீருடன் கலந்தபடி.
மடமடவென
ஓடியது./
சடசடவென
ஒலியோடு ஆங்காங்கே சாய்ந்தந்த மரங்களால்/
கிடுகிடுத்த
மக்களோ, இடையிடையே, சளக் சளக் ஒலி கேட்க தள்ளாடியபடி நடந்தனர்./
துறுத்துறுவென
குழந்தைகள் – மகிழ்ச்சியுடன்
துள்ளித்துள்ளி
குதித்தனர் ஓடுமந்த மழை நீரில்./
சிலுசிலுவென
குளிர் காற்றும் சேர்ந்துக் கொண்டது வாட்டியெடுக்க./
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.
#இலக்கணக் கவிதை = இரட்டைக்கிளவி
No comments:
Post a Comment