Translate

Friday, February 16, 2018

கோவில் திருவிழா.



கணகணவென மணியோசை எதிரோலித்தது கோவிலில்./
படப்படவென சிறகடித்து பறந்தன அருகிலிருந்த பறவைகள்./
சிவசிவாவென கன்னத்திலிட்ட பக்தர்களுடன்,
அரகரா அரகரா சிவவொலியும் ஒலித்தது ஆங்காங்கே./
அலையலையாய் மக்கள் வந்தனர் திருவிழா காணவே./
கோவிலெங்கும் சரவொளியால் மினுமினுக்க,/
குடுகுடு கிழவர்களும் சலசலவெனப் பேசியபடி அமர்ந்திருந்தனர் குழுக்குழுவாய்./
அடுத்தடுத்த பூசைகள் பரப்பரவென அரங்கேறியது./
பற்றிக் கொண்டது விறுவிறுப்பு மக்களிடையே அதிகமாக./

தவப்புதல்வன்

பத்ரி நாராயணன்.



#இலக்கக் கவிதை = இரட்டைக்கிளவி

No comments: