உனை
காதல் சிறையிலே
சிறைப்பிடிக்க
வருகிறேனென
சித்திரத்தில்
சொன்னாயோ?
கழுகுகளிடமிருந்து
பாதுகாப்பாய் நானிருக்க
பற்றியெனை சிறைப்படுத்து,
மனைவியாய் எனையேற்று
என்றவளும் இணைத்தாளோ?
தன் கையை
உன்னுடன் பிணைத்தாளோ?
எத்தனையோ மனமிருக்கு.
ஏங்குகின்ற நிலையிருக்கு.
அத்தனையும் புறக்கணித்து
சிறையென நாம் நினைத்தால்,
நாமும் சிறைதானோ?
துடிக்கின்ற இதயத்தை
சிறைக்கொடுக்க
துணிகின்ற காதலிருக்க,
தனைக்காக்க சிறை
புகுதல்
எவ்விதத்தில் கேடாகும்?
பாதுகாப்பாய் வைத்திருப்பேன்
ஊறுகின்ற பாம்பிடமும்,
குதற துடிக்கும்
கழுகிடமும்
அகப்பட்டு அழியாமல்
சுற்றியிருந்து
உனைக்காப்பேன்.
No comments:
Post a Comment