உன்
ஏக்கத்தின்
பெருமூச்சு
இங்கு
அடைந்ததும்
எப்படி
விவரிப்பேன்,
அதன்
தாக்கத்தை?
------------------------------
ஒன்றாய்
அரசியலில்
ஆயிரம்
அதற்காய்
அத்தனையும்
அமிழ்ந்தே
அழியுமோ
அதில்.
------------------------
நீ
சொல்வதெல்லாம்
அகராதியில்
இருக்கு.
திரும்ப
திரும்ப
சொல்கிறாய்
நான்
அறியாததைப்
போல.
-----------------------------------------
என்னாச்சு?
ஆனது
என்ன?
ஆகப்போவது
என்ன?
முடிவது
எங்கே?
மூழ்கினேன்
என்னில்
விடைத்தேடி
தன்னில்
விடிதலும்
மறைதலும்
தொடர்ந்தே
இயங்க.
விடையின்றி
நானே
தவித்தேன்
தனியே.
No comments:
Post a Comment