இறைவனவன்
சிலை வடிக்க
இயற்கையாய்
அவள் செழித்திருக்க
இல்லாளாய்
உமக்கமைய
இழிமகளை
நாடி போனதெங்கே?
அவள்
ஆசையுடன் காத்திருக்க
அவளின்றி
எவளையோ நீ கால் பிடிக்க
அனைத்தையும்
நீயுணர்வாய் என்றிருக்க
அறிந்துக்
கொள்ளாமல் போனதெங்கே.?
நாடகமாய்
அவள் வாழ்க்கை
நடக்கிறது
உன்னாலே
நல்லுறவு
இருக்கையில்
நாடி
நீ போனதெங்கே?
இன்றுடன்
முடியவில்லை
இளமையது
உன் வாழ்வில்
இதையே
கருத்தில் கொண்டு
இவளை
விட்டு போனதெங்கே?
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
18/10/2016
No comments:
Post a Comment