ஆசை
கனவுகளுடன் கரம் பிடிக்க
அலையும்
நிலையுடன் நீயிருக்க
அறுசுவை உனக்காய்
இங்கிருக்க
அனுபவம்
தேடி போனதெங்கே?
அவளுனக்கு
மனவியடா
அவள்
ருசி உணர்ந்தாயோ
அனுபவங்கள்
தேடி நீ,
மனம்
அலைபாய
போனதெங்கே?
உற்றவள்
உனக்கென
உரியோர்
கொடுத்தனுப்ப
உரிமையில்லா
இடம் தேடி
ஊர்
மேய போனதெங்கே?
அற்புத
உறவவள்
அத்தியாய்
பூத்திருக்க
அவளை
நீ வாட விட்டு
அமிழ்ந்து
நீ போனதெங்கே?
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
18/10/2016
No comments:
Post a Comment