Translate

Wednesday, October 19, 2016

நட்புகளுக்கு! - இன்றொரு தகவல்.


எமதினிய நட்புகளே! வணக்கமும், வாழ்த்துகளும்.
பல்வேறு தலைப்புகளில், உணர்வுகளில் புதுக்கவிதைகளை எழுதிவருவது உங்கள் அனைவருக்கும் தெரியும். சமீப காலமாக வாழ்த்துகள் மட்டும் அதிகமாக பதிக்க நேரிட்டது. சிறிது வித்தியாசமாக இருக்கட்டும் என நினைத்து "போனதெங்கே?" என்ற தலைப்பில்
1) வளர் குழந்தைகள் உள்ள தனி குடும்பத்தில் கணவன் இறந்துபோன சோகத்தில் மனைவி புலம்புவதுபோல ஏழு (7)ம்,
2) நெருங்கிய நட்பு சொல்லாமல் எங்கேயோ சென்று விட்டதை நினைத்து வருந்துவதை போல ஒன்றும் (1)ம்,
3) நல்ல மனைவி அமைந்தும் வேசியரிடம் செல்லும் கணவனை குறித்து நான்கும் (4)ம்,
4) பெண் குழந்தையாக தான் பிறந்ததால், அனாதையாய் விட்டு சென்ற பெற்றோரை நினைத்து வருந்தும் நிலையில் இரண்டு (2)மென
பதினான்கு (14) கவிதைகளை
"போனதெங்கே?" என்ற ஒரே தலைப்பில் எழுதி சிலவற்றை பதித்துள்ளேன். அதை வாசித்த சில உறவுகளும், நட்புகளும் 'உங்களுக்கு என்ன ஆச்சி? என்ன ஆச்சி?' என விசாரிப்பதை காணும்போது விச்சித்திரமாகவும், சிரிப்பாகவும் இருக்கிறது.  ஒரு படைப்பாளியின் சிந்தனைகளை வெவ்வேறு வழிகளில் செலுத்தினால்தான் மாறுப்பட்ட படைப்புகளை படைக்கமுடியும்.புரிந்து கொள்ளுங்கள் நட்புகளே.
உங்கள் ஆதரவுக்கு மிக்க மகிழ்ச்சி. உங்கள் ஆதரவு மேலும் பெருகி தொடரும் என்ற நம்பிக்கையுடன்.

--

உங்கள்
அன்பு
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments: