சுகந்தமாய்
மணம் கமழும்
சுத்தமான
சுகமான நீரிருக்க
சுழலில்
நீயாய் மாட்டிக்கொள்ள
சூறாவளியாய்
போனதெங்கே?
வளமான
தோட்டமிருக்க
வரண்ட
நிலம் தேடி நீ
வகையற்ற
பாதையில்
வழி
தவறி போனதெங்கே?
வந்தேரும்
நோய்கள்
வரள
செய்வது உனையுமினறி
வரவிருக்கும்
உன் உதயங்களையும
வாட்டுமென
மறந்து நீ போனதெங்கே?
விரகத்திலவளை
தீயெரிக்க
விளக்கு
எண்ணையின்றி தீய்ந்திருக்க
விலைமகளை
நாடி சென்றவனை
விதியென மதியின்றி போனதெங்கே?
விதியென மதியின்றி போனதெங்கே?
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
18/10/2016
No comments:
Post a Comment