Translate

Wednesday, October 12, 2016

நல்மகவை ஈன்றெடுத்ததற்கு வாழ்த்து


தாத்தா என்றழைத்து எம் மடி புரள
தவமிருப்பேன் (ந்தேன் ) எந்நாளும்.
மருமானை சுமந்த மடி,
உம் மகவை சுமக்க இயலாதா?

தங்கத்தாமரையை சுமந்திருந்து
தரணியிலே தவள விட்டாய்.
தவமிருந்த உனக்கவன்
தந்தவன் அருளினானே,
தாயென நல்பேரேடுக்க.

மகளே, நீ நலமாக தொடர்ந்திருந்து,
நல்மகவை பெற்றெடுத்தாய்.
நனைந்த விழிகள் கண் சிமிட்ட,
உடல் வலியோ  மறந்து போக,
உள்ளமெல்லாம் மகிழ்ச்சி  பொங்க,
உற்றவனின் கை பிடித்து
உன் முகமதை பதித்தனையோ?

செவிகளையே தீட்டீருந்தோம்,
ஆவலுடன் எதிர்நோக்கி.
இதயமே குளிர்ந்தது
இனிய செய்தி நாடி வந்து.
அன்புடன் ஆசிகளை
அளவின்றி தூவுகின்றோம்,
உமை அடைந்து
வாரிசுதனை தழுவவென்று.

வாழ்த்துகளுடன்,
உங்களுக்காக நாங்கள்.
--/08/2012
 

No comments: