Translate

Tuesday, October 4, 2016

விழிநீர்


எண்ணத்தில் நீயிருக்க,
எழுத்தில் உனை வடித்தேன்.
சொல்லையும் சுவைக்கும்
நிலையிலின்று யானிருக்க,
உனையின்றி எதை சொல்வேன்
நினைவின்றி போகும் வரை.
நினைவின்றி போனபின்னே
உரைப்பதெல்லாம் உளறலாகும்.
உன்னை நேசித்து அதுவிருந்தால்
உருகும் உன் நெஞ்சமுடன்
உகுக்கும் இரு கண்களும்
உருளும் சொற்களுக்கு ஈடாக.

No comments: