உற்சாகத்தில்
நீ திளைத்திருக்க
உறக்கமின்றி
அவள் தவித்திருக்க
உருகுலைய
செய்து விட்டு
உறவே
நீ போனதெங்கே?
பொங்கும்
உற்றாய் நீயிருக்க
பொசுங்கும் நிலையில் அவளிருக்க
பொசுங்கும் நிலையில் அவளிருக்க
பேதையவள்
நிலைகுலைய
போதையால்
நீ போனதெங்கே?
கோவலனாய்
நீயிருக்க
கண்ணகியாய்
அவளிருக்க
#ஊரறிய
செய்து விட்டு
உற்றவனே
போனதெங்கே?
உரிமையாய்
நீயாள
உடையவாளோ
ஏங்கியிருக்க
உணர்வுகளை
அறியாமல்
உதறி
விட்டு போனதெங்கே?
#அவள்
உன் மனைவியென ஊரறிய செய்து
விட்டு
ஆக்கம்
தவப்புதல்வன் @
A.M.பத்ரி நாராயணன்.
18/10/2016
No comments:
Post a Comment