Translate

Wednesday, October 12, 2016

திருத்திக் கொள்வோம்



நாம் தினமும் எத்தனையோ செயல்களை செய்து வருகிறோம். அவற்றில் மற்றவர்களுக்கு பயனுள்ளதும், மகிழ்வை தரக்கூடியதும், உத்வேகம் அளிக்கக் கூடிய செய்திகளை தகவல்களை அவ்வப்போது தெரிவிக்க விரும்புகிறேன்.

அதில் முதலாவதாக, வெளிநாட்டிலிருந்து நமது மாநிலத்துக்கு வந்த சில சுற்றுலா பயணிகள் மதுரை திருமலை நாயக்கர் மஹால், தஞ்சை பெரியகோயில் ஆகியவற்றை சுற்றி பார்த்துக் கொண்டே, அங்கு கீழே நமது மக்களால் வீசி எறியப்பட்டிருந்த காகிதம் மாற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை பொறுக்கி, பக்கத்தில் குப்பைத்தொட்டியை தேடியிருக்கிறார்கள், அது இல்லாமல் போகவே, தங்களிடமிருந்த பைகளில் போட்டுக் கொண்டு வெளியேறி இருக்கிறார்கள்.

அதைக் கண்ட நமது மக்களோ, அவர்களைப் பார்த்து, இவர்களும் வெட்கப்படவோ, குப்பைகளை உடன் எடுக்கவோ செய்யாமலும், திருத்திக் கொள்ளாமலும், நம்மைப் பற்றியும் நாட்டைப் பற்றியும் என்ன நினைப்பார்கள் என்பதை சிறிதும் எண்ணிப்பார்க்காமல் அவர்களைப் பார்த்து கேலியும் கிண்டலும் செய்திருக்கிறார்கள்.
இது இரண்டு வெவ்வேறு செய்திகளாக நாளிதழ்களில் வாசித்து வருத்தமடைந்தேன்.

அன்றிலிருந்து நான் போது இடங்களில் குப்பைகளை போடுவதைக் குறைத்திருக்கிறேன். யாரவது கப்பைகளைப் போட்டால் அன்பாக அறிவுறுத்தி எடுக்க செய்கிறேன். கோவில் மற்றும் போது இடங்களில் நான் தவழ்ந்து செல்லும் நிலை ஏற்பட்டால் என்னால் முடிந்தவரை குப்பைகளை சேகரித்து குப்பைத் தொட்டிகளிலோ அல்லது ஒரு ஓரங்களிலோ போடுவேன். அதைக் காணும் சிலர் ஒருமாதிரி பார்ப்பார்கள். அதை பொருட்படுத்துவதில்லை.

மிக முக்கியமாக அரசு மருத்துவமனைகள், புகைவண்டி நிலையங்களில் முன்பதிவு இடங்கள், பிளாட் ஃபாரங்கள், பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பல ஆலயங்கள் குப்பைகள், அழுக்குகள், தூசிகள், ஒட்டடைகள் நிறைந்த இடமாக இருப்பதை பார்க்கும் போது வருத்தமாக இருக்கும்.

--
என்றும்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.


No comments: