N G V Sankar
ஆஹா.. அழகு
அற்புதம்
ஆனந்தம்
அறிந்ததும் நெஞ்சம்
ஆழ்ந்தது மகிழ்வில்.
இரண்டறக் கலந்த
இல்லற வாழ்க்கை,
இறைவனின் அருளால்
இனிக்கட்டும் என்றும்.
இறைவனிடம் பணிந்தோம்
இன்புற்று நீவீர் வாழ,
குவித்தோம் கரங்களை
ஆசிகள் உம்மிடம் பெறவே.
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் நண்பரே.
No comments:
Post a Comment