நனைந்திட ஆசை
தடுக்குது மனது.
மாலை நேரம்
மழையுடன் காற்று,
மனத்தை மயக்கி
அழைக்குது இணைய.
ஆசையோ இருக்கு
ஆடிப்பாட,
வாயதோ முறைக்குது
வம்பெனச் சொல்லி.
வாடாநினைவுகளுடன்
வாழ்த்துக்கள் சொல்வோம்.
கோடைமழையை
வரவேற்று நாமும்.
No comments:
Post a Comment