Translate

Friday, May 22, 2015

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - சுபஹர், நித்யா - JP's கவிதைகள்



அனைவரின் அன்புடன்
ஆனைமுகனின் ஆசியால் 
இன்ப வாழ்வு நிலைக்க
ஈசனின் இறையருளால் 
உடலும் உள்ளமும் நலமுடன் திகழ
உலகளந்த பெருமானின் உந்துதலால்
ஊக்கமும் ஆக்கமும் பெற
என்றுமே எந்நாளும் ஏற்றமே  அடைய
ஐயமின்றி அருள்வான்.
ஒப்பில்லாப்பன் ஓங்காரநாதன்
ஔதடமாய் எஃகினைப் போல் உறுதியளிக்க
ஆசிகள் எங்கள் நல்லாசிகள்.

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்

By: JP's கவிதைகள் 

No comments: