ஏட்டுப் படிப்பினிலே
வெண்ணிலா போன்று
ஏற்றம் கண்டவளே,
கூடும் குடும்பத்திலே
கூடட்டும் என்றும் மகிழ்வலை.
ஓராயிரம் கனவுகள்
ஒவ்வொன்றாய் நிறைவேற.
ஓயாமல் செயல்பட்டு
ஒப்பற்ற நிலையுடன் நீ....
வீறுநடை போடும்
அஸ்வின் குமாரின் கரம் பிடித்து
விண்ணிலே வலம் வரும்
விளக்கொளியாய் ஒளிரட்டும்
குடும்பமுடன் உன் வாழ்வும்
ஆதியும் அவளே
அந்தமும் அவளே
அவளே உன் அன்னை - அந்த
'ஆதிலக்ஷ்மி' யின் உயிரே
உடனிருந்த தோழனாய்
உயர்வுக்கு காட்டியாய்
உடமைக்கு உரியவராம்
அசோக் புதல்வியே.
கரம் பிடிக்கும் இந்நாள்
புனிதமான நன்னாள்.
இன்றுபோல் எந்நாளும்
இனிதான நினைவுகளுடன்
மகிழ்வும் நலனும்
நிலையாய் நிலைக்க
இனிய திருமண நல்வாழ்த்துக்கள் கிருத்திகா.
அன்புடன் நல்லாசிகள்,
B.சத்யநாராயணன்
சுபாஷிணி நாராயணன்
ஆக்கம்: தவப்புதல்வன்
No comments:
Post a Comment