எட்டா உயரத்திலே
ஏணி தொடா நிலையினிலே
ஏராளக் கனிகள்
எழுநூறாய் இருந்தாலும்,
பஞ்சாய் பழுத்து
பதமாய் இருந்தாலும்,
பாழும் மனம் ஏங்கையிலே
பந்தி வைக்க முடிவதில்லை.
ஏனோ சொல்லி வைத்தான்
கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டால்
கொடுப்பினையில்லை முடவனுக்கென்று.
ஆம்...
யானும் இயம்புகின்றேன்
மதி மயங்கும் நிலையினிலே
நாவரண்டு நடப்போன் முன்
நற்கனிகள் ஆடினாலும்
எட்டா நிலையாயின் - அவன்
தாகம் தீரப்போவதில்லை
ஏணி தொடா நிலையினிலே
ஏராளக் கனிகள்
எழுநூறாய் இருந்தாலும்,
பஞ்சாய் பழுத்து
பதமாய் இருந்தாலும்,
பாழும் மனம் ஏங்கையிலே
பந்தி வைக்க முடிவதில்லை.
ஏனோ சொல்லி வைத்தான்
கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டால்
கொடுப்பினையில்லை முடவனுக்கென்று.
ஆம்...
யானும் இயம்புகின்றேன்
மதி மயங்கும் நிலையினிலே
நாவரண்டு நடப்போன் முன்
நற்கனிகள் ஆடினாலும்
எட்டா நிலையாயின் - அவன்
தாகம் தீரப்போவதில்லை
No comments:
Post a Comment