வாழ்க்கைப் பாடத்தில்
ஏமாற்றப் பள்ளங்கள்
அவள் மனத்தில் ஏராளம்.
வாய் சுட்ட சொற்களால்
வடுக்களுடன் புண்களும்
அவன் மனத்திலும் ஏராளம்.
முடிச்சிட்ட அவனோ
முடிச்சவிழ்க்க தெரியாமல்
கலங்கியவனாய் துடிக்கிறான்
காலக் கூற்றினை எதிர்நோக்கி.
அறிய செய்யுமோ - அவள்
மனம் நிறைய, வழி காட்டி.
கரைந்து விட்ட காலத்தால்
பயனது இருக்குமோ?
ஏக்கத்தின் பிடிக்குள் - இரு
உள்ளம் அல்லாட
புத்தூற்றாய் மகிழ்வு பொங்க
புது வழி பிறக்குமோ
No comments:
Post a Comment