Translate

Saturday, December 21, 2013

இன்றொரு தகவல் - நெல்சன் மண்டேலா

Photo: இன்றொரு தகவல் - நெல்சன் மண்டேலா 

மகாத்மா காந்தி வழியில், தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக, அறவழிப் போராட்டத்தில் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை சிறையில் கழித்து,  வெற்றிப் பெற்ற தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா  சமிபத்தில் மறைந்தது அனைவரும் அறிந்ததே.

 ஒரு முறையேனும் கண்களால்  அவர் முகத்தைப் பார்த்து விட வேண்டும் என்ற நினைவுடன் நாட்டின் மூளை முடுக்களிலிருந்து வந்திருந்த  பல இலட்சக் கணக்கான  மக்கள், மிக பரந்த வெளியில் கட்சி தொண்டர்கள், தன்னார்வ தொண்டர்கள், காவலர்கள், இராணுவம் மற்றும்  தடுப்புகள் எதுவுமே இல்லாமலும்,  முட்டி மோதி முன்செல்ல முயலாமலும், அரும்பெரும் தலைவர் மறைந்து விட்டபோதும், தனியார் மற்றும்  பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தாமலும்,  வளைந்தும் நெளிந்தும், 'ப' வடிவிலும் மிக நீண்ட வரிசையில் ஒருவருக்கு பின் ஒருவராக  சுய கட்டுப்பாடுடன் அஞ்சலி செலுத்த நின்றிருந்த  காட்சியை, புகைப்படத்தில் கண்டதும், மெய் சிலிர்க்க வைத்தது.

அந்த நாட்டினரை விட வாழ்விலும், கல்வியறிவிலும் முன்னேறியவர்களாய் கருதிக் கொள்ளும் நாம், நமது நாட்டில் சில நூறு நபர்கள் கூடும் இடத்தில் கூட பொறுமைக் காப்பதில்லை. முட்டி மோதிக் கொள்கிறோம். அதற்கும் ஆயிரத்தெட்டு தடுப்புகள் தேவைப்படுகிறது. அப்படியும் அதையும் மீறி செல்ல முயற்சி செய்கிறோம். அப்படி முயற்சித்தும் முடியாத பட்சத்தில் அருகிலிருக்கும் மற்றவர் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தி, ஒரு அற்ப சந்தோஷம் அடைகிறோம்.

உலகில் கற்றுக் கொள்ள, அளவிடயியலா நற்செயல்கள் பல இருக்கையில், தீதை கற்றுக் கொள்ளவும், கடைப்பிடிக்கவும் ஆர்வம் கொள்கிறோம்.  நீங்களே நினைத்துப் பாருங்கள், நாம்  பகுதியிலேயே ஒரு கட்சியில் சிறிய பொறுப்பிலிருந்தாலும், தனது கட்டுப்பாட்டிற்கு கீழ் அப்பகுதியே இருக்க வேண்டுமென நினைத்து செயல்படுபவராயினும் (பேட்டை ரவுடி), அவர்கள் வீட்டு விழா நிகழ்வுகளாயினும், துக்க நிகழ்வுகளாயினும், அப்பகுதியே அல்லோகலப்படும். கடைகள் வலிய அடைக்கப்படும். போக்குவரத்து தடை செய்யப்படும். அங்கு எதிர்பாளர்களாக கருதப்படுபவர்களின் சொத்துக்கள், இதுதான் சமயமென சேதப்படுத்தப்படும். அவரையும், அவர் குடுப்பத்தினரையும் தாக்கவும் வாய்ப்புண்டு.

# நல்ல விழிப்புணர்வுகள் எப்போது தோன்றும்? யார் தோற்றுவிப்பார்கள்?

மகாத்மா காந்தி வழியில், தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக, அறவழிப் போராட்டத்தில் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை சிறையில் கழித்து, வெற்றிப் பெற்ற தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா சமிபத்தில் மறைந்தது அனைவரும் அறிந்ததே.

ஒரு முறையேனும் கண்களால் அவர் முகத்தைப் பார்த்து விட வேண்டும் என்ற நினைவுடன் நாட்டின் மூளை முடுக்களிலிருந்து வந்திருந்த பல இலட்சக் கணக்கான மக்கள், மிக பரந்த வெளியில் கட்சி தொண்டர்கள், தன்னார்வ தொண்டர்கள், காவலர்கள், இராணுவம் மற்றும் தடுப்புகள் எதுவுமே இல்லாமலும், முட்டி மோதி முன்செல்ல முயலாமலும், அரும்பெரும் தலைவர் மறைந்து விட்டபோதும், தனியார் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தாமலும், வளைந்தும் நெளிந்தும், 'ப' வடிவிலும் மிக நீண்ட வரிசையில் ஒருவருக்கு பின் ஒருவராக சுய கட்டுப்பாடுடன் அஞ்சலி செலுத்த நின்றிருந்த காட்சியை, புகைப்படத்தில் கண்டதும், மெய் சிலிர்க்க வைத்தது.

அந்த நாட்டினரை விட வாழ்விலும், கல்வியறிவிலும் முன்னேறியவர்களாய் கருதிக் கொள்ளும் நாம், நமது நாட்டில் சில நூறு நபர்கள் கூடும் இடத்தில் கூட பொறுமைக் காப்பதில்லை. முட்டி மோதிக் கொள்கிறோம். அதற்கும் ஆயிரத்தெட்டு தடுப்புகள் தேவைப்படுகிறது. அப்படியும் அதையும் மீறி செல்ல முயற்சி செய்கிறோம். அப்படி முயற்சித்தும் முடியாத பட்சத்தில் அருகிலிருக்கும் மற்றவர் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தி, ஒரு அற்ப சந்தோஷம் அடைகிறோம்.

உலகில் கற்றுக் கொள்ள, அளவிடயியலா நற்செயல்கள் பல இருக்கையில், தீதை கற்றுக் கொள்ளவும், கடைப்பிடிக்கவும் ஆர்வம் கொள்கிறோம். நீங்களே நினைத்துப் பாருங்கள், நாம் பகுதியிலேயே ஒரு கட்சியில் சிறிய பொறுப்பிலிருந்தாலும், தனது கட்டுப்பாட்டிற்கு கீழ் அப்பகுதியே இருக்க வேண்டுமென நினைத்து செயல்படுபவராயினும் (பேட்டை ரவுடி), அவர்கள் வீட்டு விழா நிகழ்வுகளாயினும், துக்க நிகழ்வுகளாயினும், அப்பகுதியே அல்லோகலப்படும். கடைகள் வலிய அடைக்கப்படும். போக்குவரத்து தடை செய்யப்படும். அங்கு எதிர்பாளர்களாக கருதப்படுபவர்களின் சொத்துக்கள், இதுதான் சமயமென சேதப்படுத்தப்படும். அவரையும், அவர் குடுப்பத்தினரையும் தாக்கவும் வாய்ப்புண்டு.

# நல்ல விழிப்புணர்வுகள் எப்போது தோன்றும்? யார் தோற்றுவிப்பார்கள்?

No comments: