Translate

Monday, December 30, 2013

சந்நியாசி ஆனார் நடிகை ரஞ்சிதா! தீட்சை வழங்கினார் நித்தியானந்தா!!.



இது என்ன ஒரு பெரிய முக்கியமான விசயமா? எத்தனையோ பேர் தீட்சை பெறுகிறார்களே. அதைபோல் இதையும் விட வேண்டியது தானே. தேவையில்லாமல் மீடியாகாரர்கள் கூட்டமாய் நுழைய, அவர்களுடன் பொதுமக்களும் நுழைய, அடிதடி கலாட்டா. ஒருவரின் தனிப்பட்ட உரிமையான இடத்தில், அவர்களின் அனுமதியில்லாமல் நுழைவது எந்த விதத்தில் சரியென்று கருதுகிறார்கள்? தேவையா இது?

ஏதோ சட்ட விரோதமான செயல் நடைப்பெறுவது போலவும், அதை தடை செய்ய போவது போல், விற்பனையை அதிகரிக்கத்தான் மீடியாக்காரர்கள் செயல்படுகிறார்கள்.
கன்னட மடாதிபதிகள் கண்டனமாம். எதற்கு, இந்த நடிகை தங்களிடம் வந்து தீட்சை பெற்றுக் கொள்ளவில்லை என்றா? நித்தியானந்தாவையே நீங்கள் மதிப்பதில்லையே. அப்படியிருக்கையில் அவர் யாருக்கு தீட்சை கொடுத்தால் என்ன? கருமாதி செய்தாலென்ன?

# யான், நித்தியானந்தாவின் சீடனோ, அபிமானியோ அல்ல. நடைப்பெறும் செயல்கள் சரியானதாயென சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே, இதை பதித்துள்ளோம். 

No comments: