Translate

Tuesday, December 31, 2013

சேலத்தில் எயிட்ஸ்

சேலம் மாவட்டத்தில் எயிட்ஸின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
இந்திய அளவில் 0.43 சதவீதமும்,
தமிழக அளவில் 0.28 சதவீதமும்
சராசரி அளவாக இருக்கும் போது
சேலம் மாவட்டத்தில் மட்டும் இந்திய சராசரிக்கு 3 மடங்குக்கு மேலும்,
தமிழக சராசரிக்கு சுமார் ஆறு மடங்கு,
அதாவது 1.5 சதவீதம் பேர் ஹெச்.ஐ.வி., எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2012ம் வருட கணக்கெடுப்பில் 0.14 சதவீத கர்ப்பிணி பெண்கள் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்திருந்தனர்.

கடந்த காலங்களில் எயிட்ஸ் நோய் பற்றி விழிப்புணர்வு இன்மையால், தொட்டால் ஒட்டிக் கொள்ளும் என்ற பயத்தினால் எயிட்ஸ் நோயாளிகளை புறக்கணிக்கும் நிலை இருந்தது. விழிப்புணர்வு பிரச்சாரங்களாலும், மேற்கொள்ளப்படும் சிறப்பான தொடர் மருத்துவ சிகிச்சையாலும், சமுகத்தில் அவர்களை ஆதரிக்கும் நிலை சிறிது தோன்றியுள்ளது.

இரத்தத்தை கெடுப்பதற்கு கிருமிகளே காரணம். முன்பெல்லாம் ரத்தக்கொதிப்பு ( Blood  Pressure - பிளட் பிரசர் ), சக்கரை நோய் ( Diabetes ), இதய நோய் (Heart Disease ) போன்றவைகள் மக்களை பயமுறுத்தி வந்தது. இன்று அவற்றிக்கு இயல்பாக மருந்து எடுத்துக் கொண்டு வாழ்கின்றனர்.

அதுபோல் ஏ.ஆர்.டி., கூட்டு மருந்து எடுத்து, எயிட்ஸ் நோயாளிகள் தங்கள் உடலுக்கு பலம் சேர்த்துக் கொள்ள வேண்டும். மாநில, மாவட்ட அளவில் எயிட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகள், மற்றும் உலக எயிட்ஸ் தின விழா  மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டாலும், தவறான கண்ணோட்டத்துடன் எயிட்ஸ் குறித்த மூடநம்பிக்கை, ஒதுக்குதல் மற்றும் புறக்கணித்தல் இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை.

No comments: