Translate

Sunday, December 22, 2013

தண்டனை!!!!- மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில் பெட்டி



அனைத்து எக்ஸ்பிரஸ் (விரைவு) ரயில் பெட்டிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யோகமாக பெட்டி (எஸ்.எல்.ஆர்.டி) ஒடுக்கப்பட்டுள்ளது. அதில்


1) நெருக்கமாக உட்கார்ந்து (அமர்ந்து) சென்றால், 20 முதல் 25 பேர் வரை செல்லலாம்.
* பெட்டியில் ஒதுக்கியிருய்ப்பதே 2 சீட்டுகள். அதில் 6லிருந்து 8 பேர் மட்டுமே அமர முடியும். மற்றவர்கள் பேட்டியின் தரைப் பகுதியில் தான் அமர வேண்டும்.

2) படுத்து சென்றால் 4 பேர் செல்லலாம்.
* 2 சீட்டில் 4 பேர் படுக்க முடியுமா?

3) ரயில்வே ஊழியர்களும், ரயில்வே பாதுகாப்புப் படை போலீசாரும், பொது மக்களும் ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள்.

* உண்மை தான். பல சமயங்களில் ரயில் பரிசோதகர்களும் மற்றவர்களை அனுமதிக்கிறார்கள். இதை மாற்றுத்திறனாளிகளால் சுட்டிக் காட்டி கேட்க முடிவதில்லை.

** 20 முதல் 25 பேர் அமர்ந்து விட்டால், கழிவறைக்குக் கூட செல்ல இயலாது.


Photo

No comments: