
Translate
Tuesday, December 30, 2008
இனியப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

Friday, December 26, 2008
பண்பாடு
பஞ்சமில்லா......
Friday, December 19, 2008
தூணும் துரும்பும்
ஓரு இளமையின் சோகம், பூத்த பூ காய்க்க வில்லை
Thursday, December 11, 2008
ஏனோ ?
கனவுகளில்.
விடிந்த பிறகும்
உன் நினைவு.
ஏனோ மறுக்கிறது
இதயம்.
நீ இல்லை என்பதை
அறிந்தும்.
Saturday, December 6, 2008
சாப விமோசனம்
பட்டாடை மூடியிருக்க,
காலிலும் கையிலும்
வளையல்கள் பூட்டியிருக்க,
மூக்கிலும் காதிலும்
குத்திகள் பளபளக்க,
கழுத்திலிருந்த சரங்கள்
மார்புடன் உறவாட,
வண்ணப்பூச்சிகளாய்
இமைகளோ சிறகடிக்க,
கோளங்களாய்
விழிகள் ஒளி வீச,
நிறமிட்ட உதடுகளில்
நீர்ப்பூச்சு துளிர்த்திருக்க,
உடுக்கையாய்
இடை சிறுத்திருக்க,
நறுமணம் உமிழ்ந்தாள்
நாசிகள் உறுஞ்சிக் கொள்ள,
நின்ற நிலையாலே
சொரிய வைத்தாள் பெருமூச்சை.
காற்றின் விசையாலே
உடைகளோ பட்டமாக,
மனமோ பறந்தது
அப்பட்டமாக.
என் இதயத்தின்
துடிப்போசை,
அவளை எட்டியதோ
நாதமாக.
பரிதவித்த எனை நோக்கி
இளநகைக் காட்டினாள்,
விழிதனை
கணநேரம் ஓட விட்டு.
Thursday, December 4, 2008
களங்கமில்லா நட்பு !
முறுவலித்துக் கொண்டோம்.
நாள்தோரும் தொடர
நட்பிலே முடிய,
உள்ளளவும் நிலைக்க,
உறவுகள் செழிக்க...
காலங்கள் சென்றது.
களங்கமின்றி இருந்தது.
குடும்பங்கள் ஆனது,
பேதமின்றி கலந்தது.
ஆலமரமாய் விரிந்தது
அருகாய் நிலைத்தது..
தலைமுறைகள் மாறினாலும்
தழைத்து ஓங்கட்டும்.
நட்பின் ஆதிக்கம்
என்றுமே தொடரட்டும்
Monday, November 24, 2008
ஐயோ.. அப்பாவுக்கு பசிக்குமே..!
இற்று போகா நினைவுகள்!
உனையேத் தொடர,
உயிர் மட்டும்
உடலில் இருக்க,
நினைவுகள் மட்டும்
நீக்கம் அடைந்தால்!
துன்பம் என்ற
உணர்வுகள் இன்றி,
நடக்கின்ற பிணமாய்
நானும் வாழ்வேன்.
ஆனால்,
ஏக்கம் கொண்டு
மனமும் அலைய,
துன்பம் என்ற
உணர்வுகள் தொடர,
மனத்தின் வலிகளை
உணரும் இதயம்
நிலையின்றி துடிக்க,
வழியின்றி திகைத்தேன்
வலிகளை மறக்க.
Friday, November 21, 2008
மாணிக்கப் பாட்டி!
ஏனிந்த துன்பம்!
சகோதரியின் மகனும் வெளி நாட்டிலிருந்து எங்கள் வீட்டிற்கு
வந்து விட்டு, விடுமுறை முடிந்து திரும்பும்போது வீட்டில்
உள்ளவர்கள் வெவ்வேறு காரணங்களால் கலங்குவது கண்டும்,
சென்ற 16\11\2008 அன்று
எமது சகோதரி மகன் சுபகர் தம்பதியினர்
மலேசியாவுக்கு திரும்பி புறப்பட்டபோது நடைப்பெற்ற நிகழ்வினை
தொடர்ந்து பிறந்தது
இந்த கிறுக்கல்.
Monday, November 10, 2008
உம்மை யாம் தொடர்கையிலே
************************************************************************************
உதயம் 13\09\1938. மறைவு 03\11\2008.
$$$$$$$$$$$$$$$$$$ $$$$$$$$$$$$$$$$$$$
அணையிலே
தேங்கியிருக்கும்
நீர் போல,
உம் மனத்திலிருந்த
பாசமதை யாமறிவோம்.
மடை திறந்த
வெள்ளம் போல்
ஆர்பரிப்பு ஏதுமின்றி,
பொங்கி வழியும்
பாசந்தனை
உம் செயல்களே!
மென்மையாய்
வெளிகாட்டும்.
ஏக்கங்களும் தாக்கங்களும்
உம்மையும் தாக்கிருக்கும்!
பக்குவமாய் ஏற்றுக் கொண்டு
பக்கங்களைப் புரட்டி விட்டீர்.
வாழ்ந்துத் தான்
முடித்து விட்டீர்,
வழ்க்கையெனும்
நெடுங்கதையை.
பாசத்திற்கு கைமாறாய்
நினைவுகளில் வைத்திருப்போம்.
உங்களை நாங்கள் இழந்தாலும்
உணர்வுகளில் கலந்திருப்பீர்.
உணர்வுகளும்
நாள் ஒன்றில் அற்று விடும்,
உம்மை யாம் தொடர்கையிலே.
பின் குறிப்பு: உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னையிலிருந்து கோவை சென்று எமது சித்தி அவர்களின் ஈமச்சடங்கிலே கலந்துக் கொள்ள இயலவில்லை. எமது சித்தி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதுடன், அவர் பிரிவினால் சொல்லொன்னா துயரிலிருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்ககும் எங்கள் ஆழ்ந்த இரங்களையும் வருத்தங்களையும் பகிர்ந்துக் கொள்கிறேன்.
Monday, September 15, 2008
அனுப்பாத கடிதம்
உம் மணவிழா காணவே நோக்கிருந்தேன்.
இடையிலா இறுமாப்பு
இடையினிலே தோன்றியதால்
கற்பனையில் காணிடவே
கருத்தறிந்து நீ(ங்)க்கி விட்டான்.
மண்ணோடு மண்ணாக
கரையும் உடல் இங்கிருக்க,
ஆவி மட்டும் அலைந்ததுவே
சடங்கிலே கலந்துக் கொள்ள.
கூறு போட்ட மனங்களினால்
குறி வைத்து தாக்கப்பட்(டு) ட,
துடிக்கின்ற உள்ளமோ,
சிந்துகின்ற துளிகள் ஒவ்வொன்றும்
சிதறித்தான் போகிறது.
கறைகளாய் காய்கிறது.
எது எப்படி இருந்தாலும்
நீங்கா நினைவுகளில்
நிலைத்திருப்பாய்,
நித்தமும் துதித்திருப்போம்
உன் வாழ்வு
துளிர்கட்டுமென்று.
திகட்டாத தேனாய்
வாழ்வே இனிக்கட்டுமென்று
ஆசிகளை அனுப்பி வைத்தோம்
ஆனந்தமே நிலைக்கட்டுமென்று.
அன்புடன்,
மாமா
ஏ.எம்.பத்ரி நாராயணன்
@ தவப்புதல்வன்.
Thursday, September 4, 2008
விலையோ... விலை!!!!
வீனாய் உடலும்
விழுந்தது தரையில்
விரும்பா நிலையில்
விலைப்போகா மகளாய்
விதித்தது இதுவென
விதியை நோகும்
விலைமகள் இவளோ!
வின்னை முட்ட
விற்பனை செய்து
விரைவில் ஈட்ட
விரைவாய் பலருக்கு
விரித்தப் பாயாய்
விருந்தெனப் படைத்து
விலையைப் பெற்றாள்
விளைவைக் கருதா
விலைமகளும் இவளே.
Sunday, August 10, 2008
எப்போதும்.......
வெவ்வேறாய் இருந்தாலும்,
தாக்கங்கள்
ஒன்றாய் இருப்பதாலே.
உன் நினைவுடனே
நானிருக்க!
என் நினைவின்றி
இருப்பாயோ நீ?
எப்போதும் ஒரு நினைவாய்
ஒருபோதும் மறையாமல்,
நினைவுகளை அலைக்கழிக்கும்.
இந்நிலையே இருவருக்கும்
போதுவாய் இருக்குமன்றோ.
Thursday, August 7, 2008
இது ஒரு பக்கம்
பேச்சுக்கு துணை இல்லையென
அழுது தீர்ப்போம்.
ஆறுதல் சொல்ல
அருகினில் வந்தால்,
அவரைப் பிடித்து
கசக்கிப் பிழிவோம்.
ஒப்புக் கென்றே
ஒப்பாறி வைக்க
ஆயிரம் பேர்கள்
அவணியில் உண்டு.
கூட்டு சேர்ந்து
கும்மாளம் அடிக்க
துட்டு- உன்னிடம்
இருந்தால் உண்டு.
காய்ந்த குளமோ
இரையின்றி இருக்க,
பறவைக் கூட்டமோ
பறந்து செல்லும்.
இருக்கும் போது
எல்லாம் தெரியும்.
இல்லாத போதோ
வானம் மட்டும் தெரியும்.
மனம் என்பது
கரைந்து போக,
மானமும் அதிலே
தீய்ந்து போகும்.
மனத்தில் விழுந்த
சூடுகள் எல்லாம்,
கண்களில் தெரியும்
வடுக்களாய் எல்லாம்.
ஏக்கத்தின் பிடியில்
சிக்கித் தவிப்போம்,
ஏனென்று கேட்க
ஆட்களின்றி.
செல்லும் பாதையோ
தவறிச் சென்றால்,
வாழ்வும் விரைவில்
சீரழிந்து போகும்.
ஆக்க பூர்வமாய்
அனுபவத்தில் கண்டவர்,
சொன்ன சொல்லை
செவிமடுத்து கொள்வீர்.
பிமரத சாந்தி- 70 ஆண்டு பிறந்தநாள் வாழ்த்து
**********************
அன்பால் உயர்ந்தது உங்கள் பருவம்.
ஆற்றலைக் கண்டு உயர்ந்தது எங்கள் புருவம்.
இனிமையால் உயர்ந்தது உங்கள் பருவம்.
ஈகையைக் கண்டு உயர்ந்தது எங்கள் புருவம்.
உழைப்பால் உயர்ந்தது உங்கள் பருவம்.
ஊக்கத்தைக் கண்டு உயர்ந்தது எங்கள் புருவம்.
எழுபதைக் கண்டு உயர்ந்தது உங்கள் பருவம்.
ஏற்றத்தைக் கண்டு உயர்ந்தது எங்கள் புருவம்.
ஐயம்பல தீர்த்து உயர்ந்தது உங்கள் பருவம்.
ஐயமின்றி உயர்ந்தது எங்கள் புருவம் .
ஒளிமயமாய் உயர்ந்தது உங்கள் பருவம்.
ஓங்குபுகழ் கண்டு உயர்ந்தது எங்கள் புருவம்.
ஔவை நெறியில் உயர்ந்தது உங்கள் பருவம்.
அஃதை பார்த்து உயர்ந்தது எங்கள் புருவம் .
Wednesday, August 6, 2008
சொல்லி விட....!!!
சொல்லி விட.
உணர்வோ தடுக்குது
சொல்லி விட.
நீங்கா நினைவுகளை
சொல்லி விட.
நினைவுகளோ பலயிருக்கு
சொல்லி விட.
கற்பனைகள் பலவே
சொல்லி விட.
கவிதையாய் பிறக்குமோ
சொல்லி விட.
கருவிலே சிதைந்ததையும்
சொல்லி விட.
கருத்திலே கொண்டேனே
சொல்லி விட.
பார்த்ததை மட்டுமா
சொல்லி விட.
படித்ததை மட்டுமா
சொல்லி விட.
கேட்டதை மட்டுமா
சொல்லி விட.
அறிந்ததை மட்டுமா
சொல்லி விட.
இல்லை,
உணர்ந்ததை மட்டுமா
சொல்லி விட.
என்னுடைய ஆசைகளைச்
சொல்லி விட.
அலையாடும் எண்ணங்களை
சொல்லி விட.
ஆக்கமாய் இருந்தால்
சொல்லி விட.
அழகாய் இருக்கும்
சொல்லி விட.
பெற்றதை எல்லாம்
சொல்லி விட.
பெருமையாய் இருக்குமோ
சொல்லி விட.
இன்பமாய் இருப்பதை
சொல்லி விட.
இனிப்பாய் இருக்குமே
சொல்லி விட.
வேதனையாய் இருப்பதை
சொல்லி விட.
வேம்பாய் கசக்குமே
சொல்லி விட.
இருப்பினும் இருப்பினும்
சொல்லி விட.
இல்லாததை இருப்பதாய்
சொல்லி விட.
மனமோ தயங்குது
சொல்லி விட.
உறுதியினை எடுத்தேன்
சொல்லி விட.
உற்றவரை தேடினேன்
சொல்லி விட.
இழந்ததை எல்லாம்
சொல்லி விட.
இயலாமல் தவிக்கிறேன்
சொல்லி விட.
தடைகளும் இருக்கு
சொல்லி விட.
தாண்டி வருவேன்
சொல்லி விட.
எண்ணங்களோ ஆயிரம்
சொல்லி விட.
எழுத்திலிட முயல்கிறேன்
சொல்லி விட.
Sunday, August 3, 2008
அனுப்பிய வாழ்த்து
வண்ணமிகு தோட்டத்தில்
வாழ்க்கையெனும் படகு
இன்ப வாழ்வோ
இன்பமாய் வாழ்ந்திடவே,
ஏ.எம். பத்ரி நாராயணன்.@
Saturday, August 2, 2008
மணமகளைப் பார்த்த படலம்- ஒரு திருத்தம்
''என் நினைவு அகலாது
என்றுமே இணைந்திருக்க
அவன் விரலில்- அவளும்
கணையாழி ஒன்றினையே
அணிந்துத்தான் விட்டாளே.''
மேலே கண்ட செய்தி நடைப்பபெறா நிகழ்ச்சியாகும். நடைப்பெற்ற நிகழ்ச்சசியை கீழ்கானும் வகையிலே கவிதையாக வடித்துள்ளேன்.பொருத்துக் கொண்டு வாசியுங்களேன்.
கண்டதும் காதலால்
கவர்ந்து விட்ட கள்வனுக்கு,
கனிந்து வரும் காலத்தை
கண்டுணரும் நோக்கமதில்,
காலம் காட்டி ஒன்றினையே
களிப்புடனே பூட்டி விட்டாள்.
தனக்கென்றே உரிமையென
தயங்காமல் வரிந்துக் கொண்ட
தலைவனுக்கு, தானும் தான்
தளும்புகின்ற மகிழ்வுடனே
தங்கச்சங்கிலி ஒன்றினையும்
தவள விட்டாள்- அவன் மார்பினிலே.
Saturday, July 12, 2008
மணமகளை பார்த்த படலம்
உடலோ இங்கிருக்க,
மனமோ அங்கிருக்க
நடக்கின்ற நிகழ்வுகளை,
கைப்பேசி உதவியுடன்
கேட்டுணர்ந்த செய்திகளை
வண்ணமிகு காட்சிகளாய்
ஓடிடும் திரைபடமாய்
கற்பனையில் உருவாக்கி
களித்திடும் நிலையினிலே
காட்சிகளாய் விவரிப்போம்
நீங்களும் செவிமடுத்து
கேட்டுத்தான் இன்புறுங்களேன்.
காட்சி - 1.
நாட்கள் பல கழிந்த பின்னே,
ஒன்று கூடிய உறவினமோ
நடந்த பல நிகழ்வுகளை
நினைத்து, அதை அசைப்போட்டு
ஆனந்தமாய் உறவாடி
கலகலக்க செய்து கொண்டு,
இரவு பயணத்தையும்,
பகலாக ஆக்கிக்கொண்டு,
நெடுநேரம் கழிக்க,
உடலோ ஓய்வு கேட்டு
கண்களையே கிறங்க வைக்க
ஓடும் வண்டியிலே அமர்ந்தபடி
சிற்றுறக்கம் செய்தனரே.
காட்சி - 2
பயணித்த வாகனமோ,
மணமகளை நாடியே
மணமகனையும்
சுமந்துக் கொண்டு
மேடுப்பள்ள சாலையிலும்
சளைக்காமல் ஓடிச் சென்று
அதிகாலைப் பொழுதினிலே
நகரத்தை அடைந்ததுவே.
கண் விழித்த உறவினமோ,
சுறுசுறுப்பை அடைந்திடவே
சுவைக் குழம்பி வேண்டியே,
குழம்பியகம் தேடியே - கண்களை
அலைப் பாய விட்டனரே.
குளம்பியகம் கண்ட
மகிழ்ச்சியதில்,
கூப்பாடு போட்டதில்,
அதிர்ந்துத்தான் போனதே,
வண்டியும்
குலுங்கித்தான் நின்றதே.
காட்சி - 3.
அவரவர் விருப்பந்தனில்
குழம்பிகளை தேர்ந்தெடுத்தும்!
செல்ல வேண்டிய இடங்குறித்து
உடன் கேட்ட அறிவிப்பால்,
வாய் பொருக்கா சூடிருந்தும்
மனம் விரும்பிய ஆவலினால்
ஊதி ஊதிக் குடித்தனரே.
வேகமாய் -
உறுஞ்சித்தான் குடித்தனரே.
குழம்பிகளை குடித்த பின்னே,
உற்சாகம் வந்த நிலையில்
உடலையும் கைகளையும்
முறுக்கியே உதறி விட்டு,
செல்ல வேண்டிய இடங்குறித்தும்,
செய்ய வேண்டிய செயல் குறித்தும்
திட்டங்கள் தீட்டியபடி
பயணத்தைத் தொடர்ந்து,
இடமதை அடைந்தனரே.
காட்சி -4
சந்துபொந்து பல திரும்பி,
மண்டபத்தின் முன்னதுவே
மணமகனை இறக்கி விட்டு,
ஓயாமல் ஓடி வந்த
வண்டியும்-
களைப்பதனை நீக்கிக் கொள்ள
மகிழ்ச்சியாய் பெருமூச்சை
பலதடவை வெளியிட்டு
இடம் பார்த்து ஒதுங்கியது.
தங்குமிடம் அடைந்ததுமே,
காலைக்கடன் முடித்து கொண்டு,
உடலும் வாயும் கழுவி விட்டு,
ஒப்பனைகள் செய்து கொண்டு,
விரைந்தனரே-
சிற்றுண்டி அருந்திடவே.
காட்சி-5.
சிற்றுண்டி முடிந்த பின்னே,
சிறுபொழுது கழிந்த பின்னே,
மணமகளும் தனைக்காட்ட,
மணமகனை நாடி வந்தாள்,
இருந்த இடம் தேடிவந்தாள்.
இருவீட்டு உற்றாரும் உறவினரும்
புடை சூழ்ந்து பார்த்திருக்க,
அண்ணநடை பயின்ற மகள்-
அரங்கிற்கு, உள் நுழைந்தாள்.
மணமகளைக் கண்டிடவே
காத்திருந்த மணமகனும்,
கண்கொத்தி பாம்பாக
விழிகளையே அசைக்காமல்,
வைத்த விழி மாறாமல்
அவளழகை பார்த்திருந்தான்.
மணமகனின் நிலையறிய
குனிந்த தலையை சிறிதுயர்த்தி
மீன்விழியை ஓட விட்டாள்,
மின்சாரம் பாய விட்டாள்.
விழி நான்கும் ஒரு நொடியே
சந்தித்து பிரிந்தாலும்
உற்றதுணை நமக்கிதுவே
என்றநிலை எடுத்துக் கொண்ட
அவன் முகத்தில்
ஒளிவெள்ளம் பாய்வதையே
கண்டு கொண்டவளோ,
மணமகனை பார்த்தபடி,
ஆனந்த வெள்ளமதில், முகமோ
செவ்வொளி படர்ந்தபடி,
விண்மீன் நிலைப்போல
கண்களையே சிமிட்டி- அவள்
புன்முறுவள் பூத்தாளே.
காட்சி-6
நாமிருவர் இணையும் வரை,
உற்றதுணை இதுவென
கைப்பேசி ஒன்றதனை
ஆவலுடன் பரிசளித்தான்.
என் நினைவு அகலாது
என்றுமே இணைந்திருக்க
அவன் விரலில்- அவளும்
கணையாழி ஒன்றினையே
அணிந்துத்தான் விட்டாளே.
விடைப்பெற்ற நேரத்திலே
கையசைத்த மணமகனை
கண்டு அவள்,
கையசைக்க தயங்கி நின்றாள்.
பிரியவே மனமின்றி,
சில நொடி கடந்த பின்னே,
சிறிதாக கையசைத்தாள்,
விழிகளில் ஏக்கம் காட்டி.
Wednesday, July 9, 2008
குழந்தை பாட்டு- கடலும் நாமும்
************************
அடுக்கடுக்காய் கடல் அலைகள்
ஆர்பரிக்கும் நிலையிலே
அச்சமென்பது உயிரியிலே
ஆசையென்பது மனதிலே
அளவற்று இருக்கையில்
அத்துடனே விளையாடி
ஆனந்தமாய் நனைந்துக் கொண்டு
அலைகளையே கலைத்து விட
அதனருகில் சென்று நாம்
ஆர்பரிப்போம் இணையாக.
அலைகள் வரும் வேகம் கண்டு,
புறமுதுகிடுவோம் விரைவாக.
காலை பிடித்து இழுத்து விடும்,
நொடி பொழுதில் கரைந்து விடும். (இமைக்கும் நேரத்தில் மறைந்து விடும்.)
கண்ணை திறந்து பார்க்கையிலே,
அடுத்து வரும் அலைகளைக் காண்போம்.
அலையை அணைத்து ஆனந்தம் அடைவோம்,
எண்ணிக்கையின்றி அணைத்துக் கொள்வோம்.
ஓடிய கால்கள் களைப்பில் கெஞ்சும்,
மனத்தின் மகிழ்ச்சியில் அத்தனையும் மறையும்.
விலகி செல்ல மனமோ இல்லை,
மனத்தின் மகிழ்ச்சிக்கு எல்லையோ இல்லை.
விண்ணை மறைத்து கருமை பூச,
நிலவை காண கண்கள் அலையும்.
நிலவை கண்டு கடலும் பொங்கும்,
அத்துடன் நமது மகிழ்வும் பொங்கும்.
இரவு பொழுதில் மனமே இன்றி,
பிரியா விடையை கடலுக்குச் சொல்லி
திரும்பி செல்வோம் வீட்டுக்கு நாமும்.
Tuesday, July 8, 2008
அன்று நீ - இன்று நான்.
வலையிலே வீழ்த்தி,
என் கனியிதழை உறுஞ்சி,
காவியமென கிறுக்கி,
கற்புதனை கவர
நல்லவனாய் நடித்தாய்.
நட்பென தொடங்கி,
நாயகனாய் நினைத்து,
நயமாய் பேசிய - உன்னிடம்
இதழுடன் மனத்தையும் இழந்தேன்.
அச்சாரமென
அதரத்தில் பதித்து ,
அவசரமாய்- என்னுடலை
அடையப் பார்த்தாய் .
உடலோடு உறவாட,
ஊரறிய உறவுதனை
உருவாக்கிய பின்னே,
உனக்கு நான் உரிமையென,
உறுதியாய் நானிருக்க
உதறி விட்டு சென்றாய்,
ஊருறங்கும் நேரமதில்.
உன் வாயிதழோ,
விசக்கொடுக்கு.
அறிகின்றேன்.
அன்று ஆசையில்
அலைந்த என் அதரங்களோ,
அமிலத்தில் வீழ்ந்தது போல்,
அரிக்கின்ற அவதியினை
அனுதினமும் உணர்கின்றேன்.
பின் குறிப்பு :::
அன்று எனைப் பற்றி எழுதியதை, காவியமென நினைத்தேன் கயவனே. இன்று உனைப் பற்றி கிழித்திருக்கிறேன், எனக்கு தெரிந்த கிறுக்கல்களால்.
உதடுகளின் ஸ்பரிசம்
கனிரசம் சுரக்கும்.
பூவிதழ் என்றால்
தேனினை சுரக்கும்.
செவ்விதழ் என்றால்
மதுரமாய் இனிக்கும்.
பனித்துளி பூத்த இதழோ
பருக துடிக்கும்.
மென்பஞ்சு இதழோ
தடவிக் கொடுக்கும்.
காதலால் உன் இதழோ,
காந்தமாய் கவரும்.
உன் இதழினை உரசினால்
மதியும் மயங்கும்.
கள்ளுண்ட மந்தியாய்
கண்களும் கிறங்கும்.
மயக்கத்தில் கைகளும்
காவியம் படைக்கும்.
பாவை - நீ,
என்னிடமிருந்தால்
பரவசமாகும்.
இதழோடிதழ்
இன்றிணைந்த பொழுதே,
இன்பமாயிருக்க,
உடலோடு உடலும்
உறவாடிக் கொண்டால்,
உயிருள்ள வரையும்
உற்சாகமாய் இருப்போம்.
உரியவரென்றே
உரிமையில் நாமும்
உடலை பகிர்வோம்.
உற்ற நாளின்றே என்றென நினைத்து.