உணர்வில் நீயிருக்க
உன்னுடன் நான் கலக்க
உற்சாகம் ஊற்றெடுக்க
உழவு சிறப்படைய
உழைப்புக்கு பலனாக
உள்ளங்கை நிலையாக
உருக்கொண்டு முறையாக
உதயம் தோன்றுதடா.
உண்ணா நோன்பிருந்தோம்
உருவேற்றிப் பிரார்த்திருந்தோம்
உயிருக்கு உயிராய் எனக்கிருக்க
உலகம் புதுகோலம் பூண்டிருக்க
உன்னிலை தளராமல்
உனக்கு நான் தோளாவேன்
உள்ள மகிழ்வுடனே
உண்மை உரைத்தேனடா.
உங்களின்,
தவப்புதல்வன்.
No comments:
Post a Comment