Translate

Saturday, September 17, 2016

போனதெங்கே? - 8



அடுக்கினேன் என்னுள் அழகாக
புரட்டினேன் தினமும் வாசிக்க
எழுத்துக்களால் ஓவியம் நான் வரைய
மகிழ்வுடன் நீயும் உடனிருந்தாய்.

கருத்துருவெல்லாம் உனை காட்ட
மூழ்கிட வைத்தாய் எனை மறந்து.
ஏச்சுக்களும் பேச்சுக்களும் சுட்டெரிக்க
அத்தனையும் சுகமாய் நாம் ரசித்தோம்.

உரைகளுக்கு நாமும் உயிர் கொடுத்து
நினைவுடன் என்றும் உறவாடி,
நட்பெனும் உரிமையுடன் கை கோர்த்து
விழிகளில் தினமும் கதை படித்தோம்.
     
காலடியில் உலகம் சுழன்று ஓட
சுற்றி வந்தோம் நம்மை மறந்து.
சந்திக்கும் நேரத்தில் வாய் திறந்தோம்
தனிமை நிலையில் நம்மை மறந்தோம்.

தூதுக்கு அனைத்தையும் அணுகியபடி 
அந்தியை நோக்கி தவமிருந்தோம்.
மனத்துக்குள் சுமையை ஏற்றி விட்டு
முழுமையாய் மறைந்து போனதெங்கே?

--

ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments: