சிக்கலில்லா மனங்கொண்ட
பள்ளி இளமாணாக்கர்
பண்புடன் செயலாற்ற
அழகு மிகு கருத்துக்களை
நயம் மிக்க கவிப் புனைந்து (கவி வழி கருத்துக்களை,)
நாட்டியமாய் அதையமைத்து
இனிமையான இசைக்கூட்டி
ஆழமாய் பதித்திட்டார்
அறிவிலே சிறந்தோங்க.
இதமாய் நுழையும்
இயல்பாய் பதியும்
இசையில் கலந்து
இயம்பிய தகவல்.
இளம்பிராயத்தில்
இனம் கண்டு வளர
கரு கொள்ளும் எண்ணங்கள்
உருக் கொள்ள செய்து
வளர்பிறை மாணாக்கரை
வாஞ்சையுடன் சேர்த்தணைத்து
சீர் கொண்ட வழிகளில்
கனவுகளை செயலாற்ற
அழகு தமிழ் சொற்கொண்டு
சிறப்பாய் அமைத்திட்டால்
அத்தனையும் பொன்னாகும்
மாணாக்கர் கண்ணாவார்.
No comments:
Post a Comment