ஒரு தலைக்காதல், என்றுமது செல்லாது.
அவளிடம் காதலை சொல்லத் தெரியாது.
ஏற்கா காதலென்றும் இனிக்காது.
இல்லா உரு ஒன்றைக் கொடுத்து,
இருப்பை நீ அழித்துக் கொள்ளாதே.
காத்திருக்கும் காலங்கள் போக,
கனவிலது பகுதியாய் நிலைத்து போகும்.
விண்ணிலே அவள் தாரகையாய் மறைந்து போக
வீணாய் உன் வாழ்வு கலைந்து போகும்.
வீம்பாய் நீயும் செயல் பட்டால்
இடிந்து போகுமே இருவர் வாழ்வும்.
காதலென்பது உண்மையானால்
காக்க நினைக்குமே அடுத்தவர் வாழ்வை.
பூசிக்க நினைக்குமே நினைவிலே என்றும்.
புரிந்துக் கொள்வீரோ இனியேனும்?
புரிந்துக் கொள்வீரோ இனியேனும்?
No comments:
Post a Comment