Translate

Thursday, September 1, 2016

அனுபவம் - இன்றொரு தகவல்



ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது முன்னோர்கள் வாக்கு.
வளைக்க, வளைய வேண்டிய வயதில் நோய் தாக்க, நிற்க வைக்கவே பெரும்பாடு பட்டனர் எம் பெற்றோர்.
ஒரு வழியாய் பன்னிரண்டு வயதில் நிற்க, நடக்க தொடக்கம். மாற்றுத்திறனாளியானதால் கண்டிப்பும், தண்டிப்பும் பள்ளியிலும் மனையிலும் இல்லாமல் போனதால் வளையவுமில்லை, அதை உணரவுமில்லை.
உணர்ந்து வளைய முயற்சித்த போது, உடைந்தது நான் மட்டுமல்ல.


நலமான நாட்களாகட்டும் நண்பர்களே!   

No comments: