நீள(ல)மான உன் நிலையால்
நெருஞ்சியாய் என் நினைவு.
அசைத்திட முடியவில்லை
ஆழமாய் பதிந்ததால்.
அரசின் தடையில்லை
புகைக்கிறேன் என்றாயே .
விஷத்திற்கும் தடையில்லை
அருந்துவாயோ நீயுமதை .
புகையென புகைந்து போகும்
உன் நிலையை தனதாக்கும்.
தகதகக்கும் உன் உடலுடுப்பு.
தத்தளிக்கும் உன் உள்ளுறுப்பு.
''பாடி'', ஸ்ட்ராங்காக தெரிந்தாலும்
''பேஸ்'' மட்டம் வீக்காகும்.
அலசி நீயும் உறுதிக் கொண்டால்,
நலன்கள் வந்து அனைத்துக் கொள்ளும்.
முடியும் வரை புகைத்திடுவேன்
முடியா நிலையில் பார்த்துக் கொள்வோம்
முடிவதினை நீயெடுத்தால்
முடித்திடுமே முடிவுவுனை முந்திக் கொண்டு.
பரந்த உலகில் கணக்கெடுத்தால்
பத்தில் ஒன்றாய் இருந்தாலும்
விரும்ப மாட்டாய் நீயுமதில்
கணக்கிலொன்றாய் சேர்ந்து விட.
இருள் கவியும் நேரத்திலே
சூரிய நமஸ்காரம்,
நல்லதென நீ நினைத்தால்
நாறிவிடவும் வாய்ப்பிருக்கு.
புகைக்கும் உன் செயலால்
புகை செல்லும் பாதையெல்லாம்
புகைகிறதே உடனிருக்கும்
புகைக்காத உன் குடும்பம். - உன்
புகைத்தலால், பாவியாய்
புதைக்குழிகளை திறக்கிறா(ய்)யே
நாளொன்றில் நிறுத்திவிட
முடியா நிலையை நானறிவேன்.
சிறிது சிறிதாய் குறைத்து விடு,
புகைக்கும் உன் செயலை.
புதைத்திடும் காலமோ
பூங்குழி நேரமோ
பூவரித்த எழும்புகளும்
புரதமில்லா உடலுடனும்
புவித்தாயின் மடியினிலே
புரண்டிடுவாய் புரட்டிடுவர் அந்நேரம்.
இஆக்கம்
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment