Translate

Sunday, September 13, 2015

யான்



அன்னையென சிறப்பெய்த

அணுவாய் உள்நுழைந்தாய்

செல்லாய் உயிர் பெற்றாய்

அழகாய் உருப்பெற்றாய்.


கருவிலே உனை வளர்த்தேன்

சுமையென கருதாமல்.

கண்ணென உனைக் காப்பேன்

நீயதை உணராமல். 


பாசத்தை நீ உணர,

படிப்பிலே நீ உயர

பண்பிலே நீ சிறக்க


பாலையே அமுதாய் ஊட்டிடுவேன்.

No comments: