அன்னையென சிறப்பெய்த
அணுவாய் உள்நுழைந்தாய்
செல்லாய் உயிர்
பெற்றாய்
அழகாய் உருப்பெற்றாய்.
கருவிலே உனை வளர்த்தேன்
சுமையென கருதாமல்.
கண்ணென உனைக் காப்பேன்
நீயதை உணராமல்.
பாசத்தை நீ உணர,
படிப்பிலே நீ உயர
பண்பிலே நீ சிறக்க
பாலையே அமுதாய் ஊட்டிடுவேன்.
No comments:
Post a Comment