Translate

Monday, September 21, 2015

ஏனிப்படி?



உள்ளம் நோக துடிக்கிறேன்
உண்மை சொல்லி அழுகிறேன்.
உணர்வுகளை அறியாரும்
உறவினரும் ஏற்காரே.

உற்றுத்தான் பார்க்கிறாய்
உறக்கத்திலிருந்து விழித்தது போல்.
உகுக்கும் விழிநீர் கண்டு
உன் கைகளைக் கொட்டி சிரிக்கின்றாய். 

உன்னிடம் ஏன் அழுதேன்
ஊமையாய் கேட்பாய் என்றா ?
உள்ளது புரியுமென்றா?

உறுதுணையாய் இருப்பாய் என்றா?

No comments: