நின்று போனால்
காலம் தவறின்றி
விரைவாய் கழிய,
வாழ்க்கை அத்துடன்
தேய்ந்து போக,
நினைவுகள் முற்றாய்
அழிந்து போகும்
காற்று நுழைதல்
நின்று போனால்.
அவன்
வாழ்வில்
தர்மவான்.
ஆனால்???
எல்லோரிடமும்
கையேந்தும்
பிச்சைக்காரன்.
போச்சிடா....
தள்ளி வைத்தனர்
சமரசம் பேசிய
‘’உறவினனை’’
சேர்ந்துக் கொண்டனர்
சண்டைப்போட்ட
‘’சம்பந்திகள்’’
புரிஞ்சிகோங்க
புகழ்ச்சி சொற்களில்
புன்னகை விரியும்.
புகழ்ச்சியின் தொனியில்
உண்மை விளங்கும்.
காவலாய்.
நான்
விழித்திருக்கிறேன்
அவர்கள் உறங்கும்போது.
அவர்கள்
விழித்திருக்கையில்
நான் உறங்கி போகிறேன்.
No comments:
Post a Comment