Translate

Monday, September 21, 2015

நான்




சூரியன் உதிக்கிறது
வெளிச்சம் படர்கிறது
கண்ணுக்கு தெரிகிறது.
ஆனால், மனமோ?
இருட்டிலே இருக்கிறது
பாதையின்றி தவிக்கின்றது
அறியாமல் விழிக்கிறது
நிலையின்றி துடிக்கிறது.

பகல் பொழுது கழிந்தது.
பகலவன் மறைந்தது
மாலையும் வந்து
இருட்டும் ஆனது.

உள்ளமுடன் உடலும் சோர்ந்தது.
படுக்கையில் வீழ்ந்தது – ஆனால்
மனதுக்கு உறக்கமில்லை.
வழியும் கிடைக்கவில்லை.

அணுவிலும் அணுவாய்.
அவ்வணுவிலும் துரும்பாய்
அனைத்திலும் நிறைந்திருந்து
அலைக்கழிக்கும் இறைவா!

பட்டமாய் பறப்பேனா?
பாடமாக இருப்பேனா?\
பட்டழிய செய்வாயா?

பாவியாய் பெயரெடுத்து.

No comments: