சூரியன் உதிக்கிறது
வெளிச்சம் படர்கிறது
கண்ணுக்கு தெரிகிறது.
ஆனால், மனமோ?
இருட்டிலே இருக்கிறது
பாதையின்றி தவிக்கின்றது
அறியாமல் விழிக்கிறது
நிலையின்றி துடிக்கிறது.
பகல் பொழுது கழிந்தது.
பகலவன் மறைந்தது
மாலையும் வந்து
இருட்டும் ஆனது.
உள்ளமுடன் உடலும் சோர்ந்தது.
படுக்கையில் வீழ்ந்தது – ஆனால்
மனதுக்கு உறக்கமில்லை.
வழியும் கிடைக்கவில்லை.
அணுவிலும் அணுவாய்.
அவ்வணுவிலும் துரும்பாய்
அனைத்திலும் நிறைந்திருந்து
அலைக்கழிக்கும் இறைவா!
பட்டமாய் பறப்பேனா?
பாடமாக இருப்பேனா?\
பட்டழிய செய்வாயா?
பாவியாய் பெயரெடுத்து.
No comments:
Post a Comment