Translate

Monday, July 30, 2007

காதல் மயக்கம்

என் இதயம் பறக்கிறதே
காற்றடைத்த பலூன் போல.
என்னை நீ ஏற்றதாலா,
உன் மனத்தை கொடுத்ததாலா.

நானறிவேன் உன் மனத்தை
உன் மனமும் எனைப் போல
பறக்கத் துடிக்கும்
என்னுடன் சேர்ந்திணைந்தே.

மகிழ்ச்சியால் விரிகிறது
விரிவதால் வலிக்கிறது
வலியிலும் இனிக்கிறது
தொடர வேண்டுமென்றுமே.

மகிழ்ச்சியால் கண்ணும்
பொழிகிறதே பனித்துளியாய்.
"எனோ நினைக்கிறது என் மனமும்,
இன்றே நாம் இணைந்தால் சுகமென்று."

அல்லது

"ஏனோ நினைக்கிறது என் மனமும்,
இக்கணமே இறந்தாலும் நலமென்று."

பின் குறிப்பு:: இக்கிளைமாஸ் மேற்காணூம் இரண்டு முடிவுகளில் எது நன்றாக உள்ளது ?. உங்கள் கருத்தை அறிய ஆவலுடன்.

2 comments:

Anonymous said...

ஏன் இன்னும் கொஞ்சம் காதலியுங்களேன்! இப்ப என்ன அவசரம் திருமணத்திற்கு...

Dhavappudhalvan said...

@ kovaikkavi said...
"ஏன் இன்னும் கொஞ்சம் காதலியுங்களேன்! இப்ப என்ன அவசரம் திருமணத்திற்கு..."



காதலுக்கு திருமணம் ஒரு தடையில்லை.