Translate

Monday, July 16, 2007

என் அன்பே என்னவென்பேன்?....

எண்ண்ங்களின் வேகங்கள்
கட்டி வைத்த அணையினிலே
தேங்கியிருக்கும் நீர் போல,
பொங்கி வழிய வழியின்றி
அலைப்பாயும் வேலையிலே,
துடித்ததிரும் உதடுகளோ
சொற்களைப் பொருக்கிக் கொள்ள,
அடிக்கிக் கொள்ளும் இதயமோ
நிலையின்றி துடித்துக் கொள்ள,
விழிகளில் பூத்த மலர்
மனத்திலே தேன் சொறிய,
வாய் அசைத்த சொற்களெல்லாம்
செவிக் கேட்டு இருந்தாலும்,
ஏங்கி நிற்கும் கண்களுக்கு
எழுத்துருவில் அனுப்பி வைத்தேன்.

No comments: