Translate

Tuesday, July 3, 2007

(உன்) நினைவுகள் அகலாமலே !

பூகம்பத்தின் அறிகுறியாய்
எண்ணங்கள் சுழன்றடிக்க
மனமோ தள்ளாட
நிலையின்றி இருக்கையிலே
இரைப்பைநீர் வெளியே
மூக்கின் வழியே பிச்சியடிக்க
நொடியொன்றில் பூகம்பமாய்
உயிர் மூச்சடைக்க
உடலோ விசிறியடிக்க
துடித்து எழுந்தேன்.

மூச்சை சிராக்கி
ஒரு கை நீர் அருந்த
தொண்டையோ கமறலெடுக்க
மருந்துவில்லையைக் கொடுத்தேன்
கமறல் அடங்க.

மதி உறக்கம் இல்லாது
விழி உறக்கமேது
விடிவெள்ளித் தோன்றியது
மதிக்கிறக்கம் கொண்டது
விழியும் உறக்கம் கொண்டது
மயக்கமருந்தில்லாமலே.

இதயம் உறங்கவில்லை
ஆதனால்
துடித்துக் கொண்டே இருக்கிறது
நிகழ்வுகளை ஏற்று
உன் நினைவுகள் அகலாமலே.

4 comments:

c g balu said...

ஹ கவிஞர் A.M BADHRINARAYANAN தரிசனம் கிடைத்தது.....

***

vetha (kovaikkavi) said...

இதயம் உறங்கவில்லை

ஆதனால்

துடித்துக் கொண்டே இருக்கிறது.......

Dhavappudhalvan said...

உம்மை கவர்ந்த வரிகளையே கருத்தாக பதித்து விடுகிறீர்கள் சகோதரி. நன்றி.

Dhavappudhalvan said...

உம்மை கவர்ந்த வரிகளையே கருத்தாக பதித்து விடுகிறீர்கள் சகோதரி. நன்றி.