Translate

Monday, July 2, 2007

ராஜா கதை !!!!!!!!!!!

சென்ற வழியெல்லாம்
செந்நீர் ஓட,
செழித்திருந்த இடமெல்லாம்
செழிப்பற்று போக,
செல்வங்கள் பல இருந்தும்,
சேயற்ற நிலையறிந்து
செல்லாக்காசாய் உற்றார் மதிக்க ,
செவ்விளநீர் சுவையற்று போக,
செம்பொதியென மனமோ கனக்க,
செம்மரமாய் தனை நினைத்து
செருக்கடைந்த மன்னனவன்
செயலிழந்து போனான்.

No comments: