Translate

Sunday, July 15, 2007

ஹைக்கூ கவிதைகள்....

தனித்திருந்தேன்
விழித்திருந்தேன்
பசிக்கவில்லை
மனத்திலே நீ......!
@@@@@@@@@@@

என்று சந்திப்போமோ?
*********************
வட்டப் பாதையிலிருந்த
நாம்
நீள்வட்ட பாதையில்
இன்று
வெவ்வேறு திசையிலே.
##################

''சக்தி'' நீ...
''சிவ''மாய்
நெற்றிக்கண்
திறந்தாலும்
''சுந்தர''மாய்
இருக்கின்றாய்.
$$$$$$$$$$$$$$$

நீரிலா?
நிலத்திலா?
விண்ணிலா?
எங்கே?

தேடுகிறேன்
உன்னிடத்தில்
தொலைத்த
என் நினைவுகளை.
%%%%%%%%%%

நவரசம் காட்டும்
கவிதையும் - முகம்
திருப்பிக் கொண்டது
இன்று என்னிடம்.
&&&&&&&&&&&&&&

No comments: