Translate

Wednesday, July 11, 2007

உன் நினைவும்....

பார்த்த நாள் முதலே
பார்வையெல்லாம் உன் மீதே.
நினைக்கும் நினைவுகள்
காட்சிகளாய் உனைக் காட்டிடுமே.

திரும்பிய பக்கமெல்லாம்
தித்திக்க வைக்கின்றாய்.
சொல்லும் சொற்களெல்லாம்
உச்சரிக்கும் உன்னைத்தான்.

அறியாததை அறிந்துக் கொள்ள,
புரியாததை புரிந்துக் கொள்ள,
நெருங்கா நேரத்தை
எண்ணி எண்ணி,
பெரிதாக பெருமூச்சை
நாம் விடுகின்றோம்.

விரைவிலே உனையே
கவர்ந்து செல்ல
உறுதியுடன் நினைத்து
உவ்வகைக் கொள்கின்றேன்,
உன் நினைவும்
என் மேலே உள்ளதாலே.

2 comments:

vetha (kovaikkavi) said...

அறியாததை அறிந்துக் கொள்ள,

புரியாததை புரிந்துக் கொள்ள,

நெருங்கா நேரத்தை

எண்ணி எண்ணி,

பெரிதாக பெருமூச்சை

நாம் விடுகின்றோம்

Dhavappudhalvan said...

கவிதையே! தங்கள் கருத்தியம்பலுக்கு மகிழ்ச்சி.